106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 4)

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

February 28, 2019

நாள் 4: உள்ளன மனிதனின் ஆவிக்குரிய வளர்ச்சி.

சங்கீதம் 106:14 வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சை பார்த்தார்கள்.

எபிரேயர்கள் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியான இச்சைகளினால் நிறைந்திருந்தார்கள். ஒரு இடத்தில உங்களுக்கு இயேசுவை விட உலகப்பிரகாரமான காரியங்களில் அதிக தாக்கம் உண்டாகலாம். அந்த இச்சையை அழித்துவிடு. அது உங்களுக்கு ஆபத்தானது.

உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் சில சமயம் நீங்கள் ஆசையினால் மேற்கொள்ளப்படுவீர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை வண்டரத்தில் பரீட்சை பார்த்தார்கள். சண்டை போட்டார்கள் அவர்களுடைய மாம்சபிரகாரமான இச்சைகளினால்.

ஜெபியுங்கள்: பரிசுத்த ஆவியானவரே உதவி செய்யும் என் இருதயத்தை இல்லப்பாறுதலுக்கு நடத்தும்.

நீங்கள் உங்கள் பயணத்தில் ஒரு பங்காக இருக்க விரும்பவேண்டும்.உங்கள் ஆவிக்குரிய வாழ்கை பயணத்தில் ஒரு முக்கிய பகுதியாய் இருங்கள். கர்த்தர் உங்கள் சிந்தனையில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ண விரும்புகிறார். ஒரு நல்ல மகனாக அவரை பொல்லா இருக்க விரும்புகிறார்.

ஒரு விசுவாசியின் ஆவிக்குரிய முதிர்ச்சி அவன் எவ்வளவு கர்த்தரை நம்புகிறான் என்பது ஆகும்.

ஜெபம்: ஆண்டவரே என் இருதயத்தி ஆயத்தப்படுத்தும் பாதுகாத்துக்கொள்ளும்.

இஸ்ரவேல் ஜனங்கள் எதாவது ஆபத்தான அல்லது பாவமான காரியத்தை இச்சிக்கவில்லை.அவர்கள் கடையை விரும்பினார்கள் கொஞ்சம் இறைச்சியை விரும்பினார்கள். அவர்கள் அந்த ஆசை, இச்சையை மேற்கொள்ள இடம்கொடுத்தார்கள். அவர்கள் வார்த்தைகளைவிட்டு பின்வாங்கவில்லை.அவர்கள் தேவன் பேரிலுள்ள நன்றியை மேற்கொள்ளும்போது அது ஆபத்தானது.

இப்பொழுது இருக்கும் நில்லாமைக்காக நன்றி இல்லாமல் இருப்பதும் அதிகமான அபிஷேகத்திற்காக பேரசசைப்படுவது கூட பாவம்தான். பவுல் சொல்லுகிறார் பிலிபியர் 4ல் நீங்கள் ஸ்தோத்திரத்தோடு கூட விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் செய்யவேண்டும். ஸ்தோத்திரத்தோடு ஜெபிக்கவில்லை என்றால் அது பாவம்.

நண்பரே உங்கள் ஜெபங்களை ஸ்தோத்திரத்தால் மூடுங்கள். மிகுந்த துதியினால் ஜெபியுங்கள். முறுமுறுக்காதீர்கள் குறை சொல்லாதீர்கள்.

ஜெபம்: ஆண்டவரே எங்களை மிகுதியான இச்சைக்குள்ளாக போகாதபடி காத்துக்கொள்ளுங்கள்.

எந்த அசையும் இச்சையும் தேவனை விட தன்னை உயர்த்தி விடாதபடி காத்துக்கொள்ளும். விரோதியானவன் ஏதாவது ஒரு நல்ல ஆசையினால் உங்கள் இருதயத்தை கெடுத்து விடாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். வஞ்சிக்கிறவன், ஏமாற்றுகிறவன் நன்றாக வலையை விரிப்பான். ஏவாளிடம் அவன் என்ன சொல்லுகிறான் என்பதை நினைத்து பாருங்கள். நீ இதை சாப்பிடும் நாளிலே தேவனை போலாவாய் (ஆதியாகமம் 3). ஒரு ஆசை என்ற வலையை விரித்து உலகமே பாவத்தில் விழும்படி செய்துவிட்டான் சாத்தான்.

நாம் கர்த்தருக்குள் நன்றி உள்ளவர்களாக இருந்து ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்து மகளாக மகனாக வாழ முயற்சி செய்வோம்.